அன்பிற்குரிய நண்பர்களே,
'கசடற அறிவியல்’ என்னும் இச்செய்தி மடலின் முதல் பதிப்பிற்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறோம். இந்த செய்திமடல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உலகின் சுவாரஸ்யமான நிகழ்வுகளை ஒவ்வொரு மாதமும் உங்கள் மின்னஞ்சல் இன்பாக்ஸில் வழங்கும்.
எளிமையாக புரிந்துகொள்ளக்கூடிய தமிழில், இந்த செய்தி மடலைப் பெற இப்போதே குழுசேர (Subscribe!) மறக்காதீர்கள்.
ஆராய்ச்சியாளர்களின் ஆர்வத்தை தூண்டும் யானையின் தும்பிக்கை
யானைகள் தங்கள் தும்பிக்கையில் அதிக இடத்தை உருவாக்குவதற்காக மூக்குத் துவாரத்தின் உட்புறப் பகுதியை விரிவடையச் செய்கிறது. அதன் மூலம் சுமார் 9 லிட்டர் நீரை யானையால் தும்பிக்கையில் சேமிக்க முடியும், என புதிய ஆராய்ச்சி ஓன்று கண்டறிந்துள்ளது. யானைகள் ஒரு நொடிக்கு 3 லிட்டர் தண்ணீரை உறிஞ்ச ஆற்றல் படைத்தவை, இது மனித தும்மலை விட 50 மடங்கு வேகமாகும்.
ஜார்ஜியா தொழில்நுட்ப நிறுவனம் நடத்திய இந்த ஆராய்ச்சியில் யானையின் தும்பிக்கையின் உள் தசைகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை ஒரு மீயொலி ஆய்வுமூலம் கண்டறிந்தனர். இதில், அந்த தசைகள் சுருங்குவதன் மூலம், யானை அதன் நாசியை 30 சதவீதம் வரை நீர்த்துப்போகச் செய்கிறது என்பதையும் கண்டறிந்துள்ளனர்.
யானையின் தண்டு தசை அசைவுகளுக்குப் பின்னால் உள்ள இயக்கவியல் மற்றும் இயற்பியலை ஆராய்வதன் மூலம், ரோபோக்களை உருவாக்குவதற்கான புதிய வழிகளைக் கண்டறியலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெருவிக்கின்றனர். (இந்த ஆராய்ச்சி பற்றி மேலும் படிக்க...)
செவ்வாயில் பறந்த ஹெலிகாப்டரை இயக்கும் திறந்த மூல (open source) மென்பொருள்
எஃப் பிரைம் (F Prime): இது தான் நாசாவின் ஜெட் ப்ரொபுல்ஷின் லபோர்டோரி (Jet Propulsion Laboratory) வடிவமைத்த அந்த திறந்த மூல மென்பொருளின் பெயர்.
கடந்த ஏப்ரல் 19 அன்று நாசா தனது முதல் முயற்சியில் இன்ஜெனியூட்டி (Ingenuity) எனும் பெயரிடப்பட்ட ஹெலிகாப்டரை செவ்வாய் கிரகத்தில் பறத்தியது. வேற்று கிரகத்தில் ஒரு ஹெலிகாப்டரை பறக்க வைப்பது இதுவே முதல்முறை. இதை பறக்க உதவியது, எஃப் பிரைம் எனும் மென்பொருள் தான்.
இந்த எஃப் பிரை ம்மென்பொருள்: கியூப்சாட்ஸ், சிறிய விண்கலம் மற்றும் கருவிகளுக்காக வடிவமைக்கப்பட்ட மறுபயன்பாட்டு, மல்டி-மிஷன் விமான மென்பொருள் கட்டமைப்பு ஆகும். திறந்த மூல (open source) மென்பொருள் என்பதால் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நமது இன்ஜினியரிங் மாணவர்களும் விண்வெளி ஆய்வில் ஆர்வமுள்ள இளைஞர்களும் சிறு விண்கலங்களை வடிவமைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. (இந்த ஆராய்ச்சி பற்றி மேலும் படிக்க...)
நம்மைப்போல் ஈக்களும் உணவை செலக்ட் செய்யுமா?
ஈக்கள் பாரபட்சமான சுவை கொண்டவை. ஒரு மெனுவைப் பார்த்து நல்ல உணவை சுவை அறிந்து சொல்வதில் வல்லவர் போல, அவர்கள் அதிக நேரம் இனிப்பு சத்தான கலோரிகளைத் தேடுகின்றன. கசப்பான, நச்சு உணவைத் தவிர்க்கின்றன. ஆனால் இந்த உணவுத் தேர்வுகளை ஈக்கள் செய்யும்போது அவற்றின் மூளையில் என்ன நடக்கும்? என கண்டறிந்துள்ளனர், யேல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்.
கசப்பான சுவை கொண்ட சத்தான உணவு மற்றும் குறைந்த கலோரிகளுடன் கூடிய இனிப்பான உணவு ஆகிய இரு உணவை பசிகொண்ட ஈக்களுக்கு கொடுத்து நடத்திய ஆய்வில், அதிக பசி இருக்கும் ஈக்கள் அதிக கலோரிகளைப் பெற கசப்பான சுவைகொண்ட உணவை தேர்ந்தெடுக்கின்றன என கண்டறிந்துள்ளனர். நியூரோஇமேஜிங்கைப் பயன்படுத்தி ஈக்களின் மூளையில் நரம்பியல் செயல்பாட்டைக் கண்காணித்து இதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பசி மற்றும் உள் உணர்ச்சி நிலைகள் போன்ற விஷயங்கள் நம் நடத்தையை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள இந்த ஆய்வு ஒரு டெம்ப்ளேட்டை வழங்குகிறது. (இந்த ஆராய்ச்சி பற்றி மேலும் படிக்க...)
ஓ அப்படியா!
இந்த புகைப்படத்தில் இருக்கும் மலரின் சிறப்பு என்ன?
புகைப்படம்: © ஸ்காட் கெல்லி
உங்கள் பதில்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள வாட்ஸாப்ப் இணைப்பில் பகிரவும்.
சரியான பதில் அனுப்புபவர்களுக்கு சிறப்பு பரிசு காத்துக் கொண்டிருக்கிறது!!!
இது போன்ற சுவாரசியமான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தகவல்கள் அடுத்த மாதமும் உங்கள் மின்னச்சல் முகவரியில் பெற இப்போதே Subscribe பண்ணுங்க!
நல் முயற்சி. மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்!
Very good initiative. Continue..