👋அன்பிற்குரிய நண்பர்களே,
அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
கசடற அறிவியல் என்னும் இந்த செய்திமடலுக்கு நீங்கள் தரும் ஆதரவுக்கு மிக்க நன்றி. இந்த வருடம் சுவாரஸ்யமான அறிவியல் தகவல்களுடன் புதுமையான சில முயற்சிகளையும் உங்களுக்காக வழங்க முடியும் என கசடற அறிவியல் குழு நம்புகிறோம்.
kasadara@substack.com - இந்த மின்னஞ்சல் 📧 மூலம் உங்களின் ஆலோசனைகள் மற்றும் கருத்துகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்!
இப்போதே subscribe செய்துவிட்டு தொடர்ந்து படியுங்கள்!
சொடக்கு போடுவதன் அறிவியல் 🤏
கட்டை விரலையும் நடுவிரலையும் சுழற்றி சொடக்கு போடுவது நம் அனைவருக்கும் கைவந்த கலை.
சொடக்கு மேல சொடக்கு போடுது என் விரலு வந்து நடு தெருவில் நின்னு சொடக்குமேல சொடக்கு போடுது...
- தானா சேர்ந்த கூட்டம் படத்தில் வந்த இந்த பாடல் வரிகளை நாம் சொடக்கு போட்டுக்கொண்டே ரசித்திருக்கிறோம். ஆனால், மிகவும் சாதாரணமாக நாம் செய்யும் இந்த செயலின் அறிவியல் பக்கம் என்ன என்று எப்போதாவது சிந்தித்ததுண்டா?
விரலை சுழற்றி சொடக்கு போடுவது மனித உடலின் மிக வேகமான முடுக்கம் (acceleration) ஆகும், என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. விரல்கள் சொடக்கு போட எடுப்பது சுமார் ஏழு மில்லி விநாடிகள் மட்டுமே - இது கண் இமைப்பதை விட சுமார் 20 மடங்கு வேகமாக இருக்கும் என்று இந்த ஆய்வின் ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான ஜார்ஜியா டெக்கின் உயிரியல்-இயற்பியலாளர் சாத் பாம்லா கூறுகிறார்.
ஒரு விரலின் மிக வேகமான சுடக்கு போடும் திறன் தோல் உராய்வின் மத்தியஸ்தம் மூலம் செய்யப்படுகிறது. இவ்வாய்வின் மூலம், மேற்பரப்புகளுக்கிடையேயான உராய்வு எவ்வாறு டியூன் செய்யக்கூடிய தாழ்ப்பாளை அமைப்பாகப் பயன்படுத்தப்படலாம் என்றும் பல ரோபோடிக் மற்றும் அதிவேக ஆற்றல்-வெளியீட்டு கட்டமைப்புகளில் உராய்வு சிக்கலை தீர்க்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர். (இந்த ஆராய்ச்சி பற்றி மேலும் படிக்க...)
☁️மேகங்களை பார்த்து ஆய்வு செய்ய வாய்ப்பு!
ஆமாம் நீங்களும் ஆய்வு செய்யலாம். நேஷனல் ஏரோநாட்டிக்ஸ் மற்றும் ஸ்பேஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (NASA) குளோப் கிளவுட் சேலஞ்ச் 2022 -ஐ அறிவித்துள்ளது. இது ஒரு மக்கள் அறிவியல் முயற்சி. இந்த முயற்சியில் பங்கேற்பதன் மூலம் பூமியின் வளிமண்டலம் மற்றும் காலநிலை பற்றிய புரிதலை மேம்படுத்த நாசா விஞ்ஞானிகளுக்கு நீங்கள் உதவலாம்.
GLOBE Program's Observer எனும் மொபைல் அப்ளிகேஷனைபதிவிறக்கவும்.
இந்த அப்ளிகேஷன் மூலம் மேகங்களின் புகைப்படத்தை பதிவேற்றி அதன் அம்சங்களை பட்டியலிடவும்.
மொபைல் ஜிபிஎஸ் உதவியுடன் செயற்கைக்கோளின் நகர்வை நீங்கள் கண்டறியலாம்
செயற்கைக்கோளின் நகர்வை அறிந்து அதே நேரத்தில் மேகத்தின்
புகைப்படம் எடுப்பது ஆராய்ச்சிக்கு மிகவும் உதவும்
நாசா குளோப் கிளவுட் சேலஞ்ச்- 2022 – ஆனது பிப்ரவரி 15 வரை நடக்கிறது. இப்போதே இந்த சவாலில் பங்கேற்று மக்கள் விஞ்ஞானி ஆகுங்கள்.
வேற்றுலகம் தேடி…
(தொடர் - முகிலின் திகிலூட்டும் அறிவியல் சந்திப்புகள்)
தான் வைத்திருந்த சிறு கண்ணாடிக் குவளையை எடுத்து வந்தாள். பிள்ளைங்களா!! கொஞ்சம் தள்ளி நில்லுங்கள் என்று சொல்லி தான் வைத்திருந்த சிறிய இடிக்கியை எடுத்து வானிலிருந்து வந்த விண்கல்லை அதனுள் மெதுவாக போட்டாள் இருட்டாக இருந்ததால் அது வெறும் கருப்பாய் அவர்களுக்கு தெரிந்தது. மேலும் தாங்கள் நாளை செல்லவிருக்கும் பயணத்திற்காக தங்களது உடைமைகளை தயார் செய்ய வீட்டிற்கு விரைந்தார்கள்.
அன்று காலை 5 மணி அனைவரும் அக்ஷரா வீட்டின் முன் வந்தார்கள் அக்ஷராவின் அம்மா தன் வைத்திருந்த கூடாரம் மற்றும் சிறு விளையாட்டுக்கு தேவைப்படுகின்ற பொருள்கள் அனைத்தையும் எடுத்து பப்லு (நாய் குட்டி) உடன் சென்றார்கள். அதிகாலையில் மூடுபனி இருந்ததால் குளிர்ச்சி குறையாமல் குதுகலமாய் புறப்பட்டுச் சென்றார்கள், மேலும் செல்ல செல்ல காதுகளுக்கு இனிமையாய் பல பறவைகள் மற்றும் விலங்குகளின் ஓசை இவர்களின் பயணத்தின் இணையாய் தெடர்ந்தது.சற்று தொலைவில் உள்ள ஓடையின் அருகில் இருக்கும் சிறிய பூங்காவிற்கு வந்தார்கள். அப்போது மான்கள் தண்ணீர் குடித்து கொண்டிருந்தது, அங்கு அழகான நீரின் நடுவில் தாமரை மலர் அழகு சேர்ப்பது போல, குழந்தைகள் நடுவில் நின்று அங்கு அனைத்து வகையான விளக்கங்கள் கொடுத்து அழகு சேர்த்தாள் அக்ஷராவின் அம்மா. அப்போது அழகழகான வாத்து கூட்டம் வந்து இறங்கியது ஆனந்த குளியல் போட.
பிள்ளைங்களா!! இது தான் ஊசி வால் வாத்து ஐரோப்பா மற்றும் அமெரிக்கா கண்டங்களிலிருந்து நமது நாட்டின் அழகை ரசிக்க வந்தவை , அந்நாட்டில் நிலவும் பனி காலம் முடியும் வரை இங்கு தங்கி இனப்பெருக்கம் செய்யும் பின்னர் இங்கு காலநிலை மாறவே தங்கள் சொந்த நாட்டிற்கு சென்றுவிடும்.
இந்த அருமையான காட்சிகளை குழந்தைகள் தங்கள் மனதில் பதிந்து கொண்டார்கள். அப்போது, முகில் தான் கொண்டுவந்த ரகசிய கருவியை எடுத்து அதனை பதிவு செய்தான். இவன் செய்ததை மரத்தின் மேல் அமர்ந்த குரங்கு பார்த்துவிட்டது.
இவர்களின் பயணத்தை அறிந்த அங்குள்ள வன அலுவலர், தாங்கள் பாதுகாப்பாய் பயணம் செல்ல கேட்டுக்கொண்டு தேனீர் தந்து வழியனுப்பி வைத்தார்.
காலை சூரியன் உதித்து விட்டது. செங்குன்றம் வந்தடைந்தார்கள்.அப்போது அக்காங்சா தான் வைத்திருந்த தொலைநோக்கியை எடுத்து தங்கள் கிராமத்தை காண்பித்தார். அப்போது சிறுவர்கள் ஒருவரோடு ஒருவர் பழம் சாப்பிட்டு விளையாடிக் கொண்டிருந்தார்.
பிள்ளைங்களா!! தாங்கள் செல்லும் வழியில் உங்களுக்கு பிடித்த வித்யாசமான கற்களைக் கண்டால் சேகரித்து கொள்ளும்படி கேட்டுக் கொண்டார்.பின் எல்லோரும் பயணம் மேற்கொண்டனர். அப்போது அவ்வழியாக சத்தம் இல்லாமல் ஒரு நிழல் இவர்களை பின் சென்றது…..
(தொடரும்...)
எழுத்தாளர் - முத்து திவாகர்
ஓ அப்படியா!
இருட்டில் பார்க்கும் திறன் மற்றும் செங்குத்து பரப்புகளில் ஏறும் திறனுடன், இந்த விலங்குகள் பெரும்பாலும் உயிர்-ஈர்க்கப்பட்ட பொறியியலுக்கு மாதிரியாக செயல்படுகிறது.
இந்த புகைப்படத்தில் இருக்கும் விலங்கின் பெயர் என்ன?
உங்கள் பதில்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள வாட்ஸாப் இணைப்பில் பகிரவும்.